ஆர்யன் கான் 
இந்தியா

ஆர்யன் கானின் பிணை விதிகள் நாளை(அக்.29) அறிவிக்கப்படும்- மும்பை உயர்நீதிமன்றம்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு பிணை வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்.

DIN

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு பிணை வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்.

கடந்த அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளை நிராகரித்து கைதான 25 நாட்கள் கழித்து பிணை வழங்கியிருக்கிறது.

மேலும் பிணை விதிகள் குறித்து நாளை(அக்.29) தெரிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டதில்லை -டி.கே.எஸ்.இளங்கோவன்

கைதி மது அருந்திய விவகாரத்தில் காவலா் பணியிடை நீக்கம்

தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

SCROLL FOR NEXT