முகப்பு
இந்தியா

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் மேற்கு வங்க ஆளுநர் 

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கு கடந்த திங்கள்கிழமை மலேரியா கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிவடைந்த நிலையில் ஆளுநர் ஜெகதீப் தன்கார் இன்று வீடு திரும்பினார். இதனிடையே தனக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததாக எஸ்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும செவிலியர்களை அவர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆளுநர் ஜெகதீப் தன்காரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →