மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க - கோவாவில் மம்தா பானர்ஜி: தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை
நேற்று முந்தினம் (அக்-27) அபுதாபிலிருந்து எத்தியாட் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது 2 கிலோ தங்கத்தை பாதுகாப்பு கோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமான ஊழியர் ஒருவரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.90 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த அக்-26 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.45 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.