டெம்போ வாகனத்திற்குள் நடந்த கொடூரம்; சித்திரவதைக்குள்ளான மும்பை பெண்
ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை ராஜவாதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மும்பை அருகே சகினகா புறநகர் பகுதியில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் டெம்போ வாகனத்திற்குள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றம்சாட்டப்பட்ட மோகன் செளகான் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வெள்ளிக்கிழமை காலை, கைராணி சாலையில், பெண்ணை ஆண் ஒருவர் தாக்கிவருவதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவத்திற்கு சென்றபோது ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் கிடந்தார். அவரை பெண்ணை ராஜவாதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். முதற்கட்ட விசாரணையில், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இரும்பு தடியால் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சாலை அருகே நின்று கொண்டிருந்த டெம்போ வாகனத்திற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் காலை முதல் பலத்தமழை; போக்குவரத்து பாதிப்பு
வாகனம் முழுவதும் ரத்த கறை படிந்திருந்தது. அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார். கொலை முயற்சி, பாலியல் வன்புணர்வு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.