சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீரம் இஸ்டிடியூட் ஏற்கெனவே கோவாவேக்ஸ் மற்றும் 12 முதல் 17 வயதினருக்குட்பட்ட நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 7 முதல் 11 வயது வரையிலான சிறார்கள் கரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்க மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தெற்கு ஆசியாவிலுள்ள நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதுவரை 870 மில்லியன் தவணை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
இந்நிலையில் பல்வேறுகட்ட விவாதத்திற்கு பிறகு 7 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது.