இந்தியா

காஷ்மீர்: பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

DIN

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் இன்று (செப்-28) பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மற்றொரு தீவிரவாதியை உயிருடன் பிடித்தனர்.

கடந்த செப்-18 ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து உரி பகுதியில் ஊடுருவியத் தீவிரவாதிகளை சில நாட்களாக ராணுவத்தினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று உரி பகுதியில் 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

பின் இருதரப்பிற்கும் ஏற்பட்ட தாக்குதலில் ராணுவத்தினர் ஒரு தீவிரவாதியை சுட்டுகொன்றனர். மற்றொரு தீவிரவாதியை உயிருடன் பிடித்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலில் 4 ராணுவ வீரர்களும் குண்டடிபட்டு   காயம் அடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT