பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள்: உச்சநீதிமன்றம் 
இந்தியா

பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள்: உச்சநீதிமன்றம் கண்டனம்

பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையாக விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

DIN

பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான முறையில் விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
பட்டாசு தயாரிப்பு தொடர்பாக சிபிஐ வழங்கியுள்ள முதல்கட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், பட்டாசு தயாரிப்பு விதிமீறல் தொடர்பான முழு அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ கண்டறிந்த ஆரம்பகட்ட அறிக்கைகளை மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு தயாரிக்க உதவும் பேரியம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த தனிமம் பயன்படுத்தப்படுகிறது. பட்டாசு தயாரிப்பில் ஒரு சில நிறுவனங்கள் அதிகமாக பேரியம் தனிமத்தை பயன்படுத்துவதாக முதல் கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரான் போராட்டம்! இதுவரை 6,100-க்கும் அதிகமானோர் பலி!

கருவுற்றிருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்த சின்ன திரை நடிகை!

எம்.ஜி.யின் புதிய வரவு... மெஜஸ்டர் பிப்.12ல் அறிமுகம்!!

சிலம்பரசனுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்!

சுத்தமான வீடு அனைவரது கனவு! அது நனவாக நல்ல யோசனைகள்!!

SCROLL FOR NEXT