முகப்பு
இந்தியா

கேரளத்தில் கட்டுக்குள் வராத கரோனா தொற்று: ஒரே நாளில் 21,427 பேர் பாதிப்பு

கேரளத்தில் புதிதாக 21,427 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
கேரளத்தில் கட்டுக்குள் வராத கரோனா தொற்று: ஒரே நாளில் 21,427 பேர் பாதிப்பு
பகிர்:

கேரளத்தில் புதிதாக 21,427 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 21,427 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 15.5% சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 18,731 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 179 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 35,48,196 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 19,049 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.