குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தயார்: கேரளம்
குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த கேரள அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்தியாகுழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தயார்: கேரளம்
குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த கேரள அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த கேரள அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் வாகனத்திலிருந்தபடியே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மகளிர் கல்லூரியிலுள்ள இதற்கான தடுப்பூசி மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பார்வையிட்டார்.
இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது:
"வாகனத்திலிருந்தபடியே தடுப்பூசி செலுத்திகொள்ளும் மையங்களின் சிறப்பம்சம், மக்கள் தங்களது வாகனங்களிலிருந்து இறங்காமலே பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பரிசோதனையும் செய்துகொள்ளலாம். தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு யாருக்கேனும் பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அங்கேயே வழங்கப்படும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படும்.
இதையும் படிக்க | அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது அரசின் இலக்கு.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 52 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 19 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் இது கூடுதல் சராசரி.
கேரளத்தில் நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் அதிகமாக உள்ளது. கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால், ஓணம் பண்டிகையின்போது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்வும் வாழ்வியலும் முக்கியம்தான், சுயபாதுகாப்பு அதைவிட முக்கியம்."