நாட்டில் 127.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 127.93 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 127.93 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 24,55,911 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,27,93,09,669 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 46,75,22,029 இரண்டாம் தவணை - 24,44,87,121 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 18,69,15,771 இரண்டாம் தவணை - 12,62,94,812 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,69,97,622 இரண்டாம் தவணை - 8,21,86,280 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,84,617 இரண்டாம் தவணை - 95,48,009 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,81,233 இரண்டாம் தவணை - 1,65,92,175 |
| மொத்தம் | 1,27,93,09,669 |