அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! - ஈரான் அரசு அறிவிப்பு!
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார்...
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் கடந்த பிப். 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்துவதால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது இனி தங்களது அஜெண்டாவில் இல்லை எனவும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்பட 1,300-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Iranian Foreign Minister Seyyed Abbas Araghchi has announced that there is no negotiations with the United States.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.