முகப்பு
இந்தியா

வேளாண் சட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே எம்.பி.க்கள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டம்
பகிர்:


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வாயிலில் கைகளில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற சாலைகளில் ஊர்வலமாக வந்தனர்.

நடப்பாண்டுக்கான முதல் பட்ஜெட் கூட்டம் குடியரசுத்தலைவர் உரையுடன் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வருகைப் புரியும்போது இடது சாரி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில் திரண்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி சட்டமாக நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் நாடாளுமன்ற வாயிலில் பதாகைகளை ஏந்தி நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →