முகப்பு
இந்தியா

இந்தியா வந்தார் நேபாள பிரதமர்: ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கருடன் மாலை சந்திப்பு

நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு இன்று வருகை புரிந்துள்ளார். இன்று மாலை அவர், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசவுள்ளார். 

Updated On : 1 ஏப்ரல், 2022 at 11:49 AM
பகிர்:


நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு இன்று வருகை புரிந்துள்ளார். இன்று மாலை அவர், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசவுள்ளார். 

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷர்மா ஓலி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமராக பதவியேற்றுள்ள  ஷோ் பகதூா் தாபா இந்தியாவிற்கு வருகைபுரிந்துள்ளார். 

நேபாளத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஷோ் பகதூா் தேவுபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

முதல் நாள் பயணத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார். 

இரண்டாம் நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அரசுமுறை நிகழ்ச்சிகள் தவிர, பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசிக்கும் நேபாள பிரதமா் செல்லவுள்ளாா்.

இந்த சந்திப்பில் நேபாளம் - இந்தியா இடையேயான வணிகம், நட்புறவு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி நேபாளம் திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.