கோப்புப்படம் 
இந்தியா

ஷோபியான் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

DIN


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,  ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,  பாதுகாப்புப் படையினர் இரவு முழுவதும் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்லதற்காக, இன்று வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT