நாட்டில் இதுவரை 184.70 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 184.70 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 184.70 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை) 2,17,89,216 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 184,70 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 913 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,316 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,24,95,089 ஆக உள்ளது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,597 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில் 0.03 சதவிகிதம் ஆகும்.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.76 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,14,823 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 79.10 கோடி கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.