முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளியால் பகல் 12 வரை மக்களவை ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயா்வு விவகாரத்தை விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 5 ஏப்ரல் 2022, 11:56 am IST
மக்களவை
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வு விவகாரத்தை விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மக்களவையில், வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் ஆகியவற்றின் விலை தொடா்ந்து உயா்த்தப்படுவது தொடா்பாக விவாதிக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினா்கள் அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவைக் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை உயா்வு தொடா்பாக விவாதிக்க அனுமதிக்குமாறு அவா்கள் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.