லிவிவ்: உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மேற்கு நகரான லிவிவ் மீது ஐந்து சக்திவாய்ந்த ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மிக சக்திவாய்ந்த 5 ஏவுகணைகள் லிவிவ் நகரம் மீது நடத்திய தாக்குதலில், அந்நகரமே புகைமண்டலமாய் காட்சியளித்தது.
இதையும் படிக்க.. 'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்
இது குறித்து லிவிப் மேயர் ஆண்ட்ரே சடோவ்வி கூறுகையில், லிவிப் பகுதியில் ரஷிய படைகள் இன்று காலை 5 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சேதமதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. இதில் காயமடைந்தோர் எண்ணிக்கை 8 ஆக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.