5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!
5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை விதிப்பு.
திருப்பத்தூரில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விடியோ கேம் விளையாட செல்போன் தருவதாகக் கூறி 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருப்பத்தூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்திரன் மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Advertisement
மேலும் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.