இந்தியா

லக்னௌவில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி, 30 பேர் காயம்

லக்னௌவில் திருமண விழாவின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். 

DIN

லக்னௌவில் திருமண விழாவின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 

பிஜ்னோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நுத்ரிகேடா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு வீட்டில் திருமண விழா நடந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சஷிந்திர யாதவின் பூர்வீக வீட்டின் பால்கனி அவரது மகளின் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் போது, ​​திருமண ஊர்வலத்தை வரவேற்க பல பெண்கள் பால்கனியில் நின்று கொண்டிருந்தனர். 

இறந்தவர்கள் ஷ்ரத்தா (5), கிஷோர் திவாரி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 12 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அவர்கள் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல் அதிகாரி கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

முதல்வர் ஸ்டாலின் வருகை! கோவையில் போக்குவரத்து மாற்றம்!!

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT