முகப்பு
இந்தியா

நாட்டில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 2,527 பேருக்குத் தொற்று

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,451 ஆக இருந்த நிலையில், இன்று 2,527 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,451 ஆக இருந்த நிலையில், இன்று 2,527 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,527 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 33 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,22,149 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவிகிதமாக உள்ளது.

நேற்று ஒரேநாளில் 1,656 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,17,724 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 15,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,87,46,72,536 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,13,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →