இந்தியா

காஷ்மீர்: இந்தாண்டில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கும் வகையில் இந்தாண்டு துவக்கம் முதலே எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சோதனையின்போது நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இதில் 32 பயங்கரவாதிகள் கடந்த 3 மாதத்தில் சுடபட்டவர்கள் என காஷ்மீர் காவல்துறைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமான ஷோபியன், பரமுல்லா மாவட்டங்களில் அடிக்கடி பாதுக்காப்புப் படையினர் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT