நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் 
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் பதவி கேட்டேனா? பாஜகவுக்கு நிதீஷ் குமார் பதில் 

பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பொய்யான காரணங்களை அக்கட்சியினர் தெரிவித்து வருவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பொய்யான காரணங்களை அக்கட்சியினர் தெரிவித்து வருவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிகாரில் பாஜக உடனான கூட்டணியிலிருந்து வெளிவந்த நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார். 

நிதீஷ் குமாரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக அவர் உள்பட தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி குடியரசு துணைத் தலைவர் பதவி வழங்காததாலேயே நிதீஷ் குமார் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள நிதீஷ் குமார், “பாஜகவினர் தெரிவிப்பது நகைச்சுவையானது. எனக்கு அப்படி ஒரு கோரிக்கை இல்லை. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நான் எந்தளவு ஆதரவு தெரிவித்திருந்தேன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக சுஷில் மோடி தெரிவித்த கருத்துகள் பொய்யானவை எனவும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT