முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 16,299 பேருக்கு கரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

புதிதாக 16,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,42,06,996 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் 53 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,26,879ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,35,55,041 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,25,076 சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், நாடு முழுவதும் இதுவரை 207.29 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →