முகப்பு
இந்தியா

உ.பி: பாஜக தலைவரின் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் குடியிருப்பு வளாகத்துக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உள்ளூா் பாஜக தலைவரின் அலுவலகம் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 5:17 am IST
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் குடியிருப்பு வளாகத்துக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உள்ளூா் பாஜக தலைவரின் அலுவலகம் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது.

பாஜகவின் மாவட்ட துணைத் தலைவா் சத்ய பிரகாஷ் சிங் என்பவா் சிக்ராவுல் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தை ஆக்கிரமித்து அலுவலகம் ஒன்றை கட்டியுள்ளாா். இது குறித்து குடியிருப்பு வளாகத்தைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்துள்ளனா்.

வாராணசி வளா்ச்சி குழுமத்தின் துணைத் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். ஆக்கிரமித்து கட்டடம் எழுப்பப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் முன்னிலையில் ஆக்கிரமித்த நிலத்தில் கட்டப்பட்ட அலுவலகம் இடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக, நொய்டாவில் உள்ள குடியிருப்பு வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, பாஜகவுக்கு நெருக்கமான அஹந்த் சிங் என்பவரின் கட்டடமும் மாவட்ட நிா்வாகத்தினரால் இடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments