நகரங்களில் அதிக வரவேற்பைப் பெறும் எதிர்நீச்சல் -2 தொடர்!
எதிர்நீச்சல் -2 தொடர் நகர்ப்புறங்களில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது குறித்து...
எதிர்நீச்சல் -2 தொடர் நகர்ப்புறங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னணியில் இருந்த கயல், மருமகள், அன்னம் ஆகியத் தொடர்களை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
இத்தொடரிலும் முதல் பாகத்தில் நடித்த நடிகைகளே முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு திருமணமாகிச் செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இத்தொடரில் நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
டிஆர்பிக்காக புதிய பாத்திரங்களை எதிர்நீச்சல் - 2 தொடர் அறிமுகம் செய்து வந்தாலும், கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால், தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
எனினும் கடந்த சில மாதங்களாக டிஆர்பி புள்ளிப் பட்டியலில் எதிர்நீச்சல் தொடரைக் காட்டிலும் கயல், மூன்று முடிச்சு, சிங்கப் பெண்ணே போன்ற தொடர்கள் முதன்மை இடங்களில் நீடித்து வந்தன.
இந்நிலையில் நகர்ப்புறங்களில் அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொடராக எதிர்நீச்சல் -2 உள்ளது. நகர்ப்புறங்களுக்கான டிஆர்பி புள்ளிப் பட்டியலில் அதிகபட்சமாக 4.9 புள்ளிகளை எதிர்நீச்சல் - 2 தொடர் பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் தொடர் 4.7 புள்ளிகளையும், கேப்ரியல்லா நாயகியாக நடிக்கும் மருமகள் தொடர் 4.6 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
4வது இடத்தில் அயலி புகழ், அபி நட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடர் உள்ளது. இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 4.4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
எதிநீச்சல் -2 தொடர் மீண்டும் முதன்மை இடம் பிடித்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Ethirneechal 2 Serial Urban raings beated kayal, marumagal serials
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.