ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: சிஆர்பிஎஃப் அதிகாரி காயம்
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் அதிகாரி காயமடைந்தார்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் அதிகாரி காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் உள்ள பாதுகாப்புப் படையினரின் பதுங்கு குழி மீது பயங்கரவாதிகள் இன்று சக்திவாய்ந்த கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரி பர்வேஸ் ராணா காயமடைந்தார்.
இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.