இந்தியா

தில்லியில் மேலும் 1,227 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 1,227 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 1,227 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 8 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 14.57 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்து 12 நாள்களாக 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 1,300-க்கும் கீழ் குறைந்தது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,85,822-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,389-ஆக உயா்ந்தது.

நகரில் ஞாயிற்றுக்கிழமை 2,162 பேருக்கு தொற்று பாதிப்பும், 5 இறப்புகளும், 12.64 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

நகரில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 8,421 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT