இந்தியா

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: ஜம்முவில் பதற்றம்

DIN

ஜம்மு - காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில் தொடர்ந்து தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில், சித்ரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 6 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஜம்மு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு - காஷ்மீரின் சோட்டிபோரா மாவட்டத்தில், தீவிரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டித் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT