இந்தியா

உத்தரகண்ட்: மருத்துவமனைக்கு வெளியே பெண்ணுக்குப் பிரசவம், செவிலியர் பணி நீக்கம்

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே பிரசவம் பார்க்க நேர்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில், மருத்துவமனைக்கு வெளியே அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்படும் விடியோவை பகிர்ந்துள்ளார். 


அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ பாஜக ஆட்சியில் மருத்துவமனைக்கு வெளியே திறந்த வெளியில் பிரசவம் பார்க்கும் நிலைக்கு பெண் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். நாம் எப்படி அம்ரித் மகோத்சவ் கொண்டாட முடியும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பிலிபிட் மாவட்டத்தின் முதன்மை மருத்துவ அலுவலர் அலோக் ஷர்மா கூறியதாவது: “ இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணியில் இருந்த செவிலியர் ரூபி சரிவர கடமையை செய்யத் தவறியதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மேலும், அந்த மருத்துவமனையின் மருத்துவர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT