இந்தியா

உ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்

DIN

உ.பி.யில் அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், ரிகிபூர்வா கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை அப்பகுதி மக்கள் சிலை சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சிலையை மாற்றி தருவதாக உறுதியளித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் தீட்சித் கூறுகையில், "சந்தேகத்திற்குரிய நபர்கள் இருட்டில் சிலையை சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்துவிடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT