இந்தியா

செப்டம்பரில் இந்தியா வருகிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா: தகவல்

DIN

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கு இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு வருமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியா வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மூன்று நாள் பயணமாக வரும் அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி வங்கதேசம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தை வங்கதேசத்துக்கான இந்திய தூதர் விக்ரம் கே துரைசுவாமி, பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் அளித்தார். 

ஷேக் ஹசீனா செப்டம்பரில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல் கரீம் கூறினார். 

இறுதியாக, கடந்த 2019ல் ஷேக் ஹசீனா இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT