இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி-வேன் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 

PTI

உத்தரப் பிரதேசத்தின் தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி-வேன் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 

ஞாயிறன்று இரவு மிர்சாபூர் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி வேனுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தனர். 

நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் இருவர் திங்கள்கிழமை காலை மருத்துவமனையில் இறந்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சூரஜ் ராய் தெரிவித்தார்.

இந்த விபத்தில் வேன் முற்றிலும் சேதமடைந்தது.

இறந்தவர்கள் ஆதில் (25), அவரது கர்ப்பிணி மனைவி அஸ்மா (24), மஷ்கூர் (26), அவரது மனைவி ருக்சார் (27), ரிஹானா (38), சுல்தானா (35) என அடையாளம் காணப்பட்டனர்.

லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT