இந்தியா

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: பாஜக எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்

DIN


தெலங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதியின் எம்எல்ஏவான ராஜா சிங், நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்தைத் தெரிவித்ததுடன், நபிகள் பற்றி தொலைக்காட்சி விவாதத்தில் பேசி சர்ச்சையான நூபுர் சர்மாவின் கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, இஸ்லாமியர்கள் பலர் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவில் ராஜா சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக வழக்குப் பதியப்பட்டு இன்று காலை எம்எல்ஏ ராஜா சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ.வான ராஜா சிங்கை இடைநீக்கம் செய்த பாஜக தலைமை, 10 நாள்களில் விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ராஜா சிங்கிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரையும் காவல்துறை கைது செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT