மும்பை: சிறுமியைக் கொன்று பையில் வைத்து வீசிய மர்ம நபர்கள்
16 வயது சிறுமியைக் கொன்று பையில் வைத்து தேசிய நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாமும்பை: சிறுமியைக் கொன்று பையில் வைத்து வீசிய மர்ம நபர்கள்
16 வயது சிறுமியைக் கொன்று பையில் வைத்து தேசிய நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது சிறுமியைக் கொன்று பையில் வைத்து தேசிய நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பல்கார் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுமியின் உடல் மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நய்கயோன் பாலத்திற்கு அருகே அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்ற ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கிடந்த பையினைக் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுமியின் உடலில் பல இடங்களில் கத்தியினால் உண்டான காயங்கள் தென்பட்டுள்ளன. அவரது உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இந்த சிறுமி மும்பையைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், அவர் கொலை செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்டு இருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.