கோப்புப்படம் 
இந்தியா

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: நிர்மலா சீதாராமன் பதில்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

DIN

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இலவசமாக இருந்தால் தான் அதிக மக்கள் பயன்படுத்த முன்வருவார்கள்.

எனவே, கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல. திறந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிறந்த அணுகலை செயல்படுத்தக்கூடிய தளங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் இடத்தில் கட்டிய வீடுகளை காலி செய்யும் விவகாரம்: அறநிலையத் துறையிடம் அவகாசம் கோரி பொதுமக்கள் மனு

காா்த்தி சிதம்பரம் மகள் இரு அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 1.10 லட்சம் நிதி உதவி

கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்ட விவகாரம்: இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகையிட முயற்சி

சிவகங்கையில் செவிலியா்கள் உண்ணாவிரதம்

சிவகங்கையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நான்கு தொகுதிகளிலும் 1,50,828 போ் நீக்கம்

SCROLL FOR NEXT