இந்தியா

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்: நிர்மலா சீதாராமன் பதில்

DIN

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இலவசமாக இருந்தால் தான் அதிக மக்கள் பயன்படுத்த முன்வருவார்கள்.

எனவே, கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல. திறந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிறந்த அணுகலை செயல்படுத்தக்கூடிய தளங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT