பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு 
இந்தியா

பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு

பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் வெடித்தன. அவற்றில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் நீதிமன்ற அவமதிப்பு  வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பின்போது...

மசூதி இடிப்பிற்குப் பின் எழுந்த வன்முறைப் போராட்டங்கள், தாக்குதல்கள் போன்ற  பல்வேறு வழக்குகளில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு: ராஃப்ரி தேவி மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT