முகப்பு
இந்தியா

ஆயுதப்படைகளுக்கு நாடு எப்போது கடமைப்பட்டிருக்கும்: பிரதமர் மோடி

விஜய் திவாஸ் தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
பகிர்:

விஜய் திவாஸ் தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். 

கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.

பிரதமர் மோடி தனது சுட்டுரை பதிவில், 

1971-ல் நடைபெற்ற போரில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த துணிச்சலான அனைத்து ஆயுதப் படை வீரர்களுக்கும் விஜய் திவாஸான இன்று மரியாதை செலுத்துகிறேன். 

நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதப் படைகளுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.