முதல் தளத்திலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட மாணவி; ஆசிரியை கைது 
இந்தியா

முதல் தளத்திலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட மாணவி; ஆசிரியை கைது

தில்லியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவியை, முதல் தளத்தில் இருந்து வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஆசிரியை தூக்கி வீசியதில், அவர் பலத்த காயமடைந்தார்.

DIN


தில்லியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவியை, முதல் தளத்தில் இருந்து வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஆசிரியை தூக்கி வீசியதில், அவர் பலத்த காயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியை கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில், பள்ளியின் வகுப்பறை ஜன்னல் வழியாக, மாணவி தூக்கி வீசப்பட்டதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், தற்போது உயிருக்கு ஆபத்தில்லை என்றும், சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வகுப்பறையில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை கீதா தேஷ்வால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT