ஆண்டு முழுவதும் 1.64 லட்சம் தற்கொலைகள்! மத்திய அரசு
நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | சோகத்தில் முடிந்த கால்பந்து உலகக்கோப்பை கொண்டாட்டம்!
Advertisement
Advertisement
தற்கொலை செய்துகொண்டவர்கள், அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்ட மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசு அறிக்கையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.