இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி!

DIN

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டரில்,  கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

காஷ்மீர் பகுதியில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இன்னும் என்கவுன்டர் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்றும், இரண்டு கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT