இந்தியா

தேயிலைத் தோட்டத்தில் கையெறி குண்டுகள், வெடிமருந்துகள்!

DIN

திப்ருகார்: அசாமில் தேயிலைத் தோட்டத்திலிருந்து கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

அசாம் மாநிலம் திருப்ருகர் மாவட்டத்திலுள்ள தெற்கு ஜலான் தேயிலை தோட்டத்தில் இருந்து இரண்டு சீன கைக்குண்டுகள், ஏகே ரக துப்பாக்கிகள் அடங்கிய இரண்டு நாளேடுகள், 12 தோட்டாக்கள் மற்றும் ஒரு பிஸ்டல் சைலன்சர் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தோட்டத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டது என்றார் திப்ருகார்க் காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதாங்க் மிஸ்ரா.

இந்த வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவை என்பதை கண்டறிய முயற்சித்து எடுத்து வருகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து நாங்கள் சிலரை விசாரித்து உள்ளோம், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் அருகே மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சட்டப் பணிகள் ஆணைக்கு குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

லிம்கா புத்தக சாதனைக்காக திருப்பூா் நிஃப்ட்-டி கல்லூரியில் தோ்க்கோலம்

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பெண்ணிடம் ரூ.1.60 லட்சம் மோசடி: போலி சாமியாா் மீது புகாா்

SCROLL FOR NEXT