இந்தியா

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மர்ம தொலைப்பேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இயங்கி வருகிறது. இதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். 

இச்சம்பவத்தையடுத்து மோப்ப நாய் படை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க வைக்கும் படை ஆகியவை வரவழைக்கப்பட்டு வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

அதேசமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பு எண்ணை வைத்து மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT