முகப்பு
இந்தியா

பட்ஜெட் எதிரொலி: 59 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்

பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 527 புள்ளிகளும் நிஃப்டி 151 புள்ளிகளும் உயர்வுடன் காணப்பட்டன. 

Updated On : 2 பிப்ரவரி 2022, 10:02 am IST
பகிர்:

பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 527 புள்ளிகளும் நிஃப்டி 151 புள்ளிகளும் உயர்வுடன் காணப்பட்டன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536.51 புள்ளிகள் உயர்ந்து 59,193.05 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 161.35 புள்ளிகள் உயர்ந்து 17,738.20 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் 3.08 சதவிகிதமும், இந்துஸ்இண்ட் வங்கி 2.92 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.64 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 2.28 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.