இந்தியா

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு: தொண்டர்களுடனான உரையில் பிரதமர் கருத்து

DIN

நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.

2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்ஜெட்டில் உள்ள சாத்தியங்கள், வாய்ப்புகள், நலன்கள் குறித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

அதில் பேசிய அவர், பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறி வருகிறது. இதனால் நாட்டையும், அதன் பொருளாதார நிலையையும் முன்னோக்கி எடுத்துச்செல்வது அவசியம். 

7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ. 2.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சுயசார்பு இந்தியா மற்றும் நவீன இந்தியாவை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT