பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது கரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரம் ஒருநாள் பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 14,36,413 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 29 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 29,330 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக 9,590 பேர் உள்பட இதுவரை 13,04,980 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,02,103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.