ராஜஸ்தான் பாஜக தலைவரின் விநோத சபதம்? 
இந்தியா

காங்கிரஸை தோற்கடிக்க.. ராஜஸ்தான் பாஜக தலைவரின் விநோத சபதம்?

காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வரை மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளார்.

ANI


அலிகார்; ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வரை மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளார்.

அலிகார் அருகே நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய சதீஷ் பூனியா, வரும் 2023ஆம் ஆண்டு ராஜஸ்தான் பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும் வரை, மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளேன். அது மட்டுமல்ல, அதுவரை இரவு உணவு கூட எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

ராஜஸ்தான் பேரவைக்கு வரும் 2023ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில், 199 தொகுதிகளில், 99 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி, பாஜகவிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT