முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கரோனா 3-ஆம் அலை குறைந்ததையடுத்து, இன்று முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியது. 

Updated On : 14 பிப்ரவரி 2022, 4:39 pm IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் கரோனா 3-ஆம் அலை குறைந்ததையடுத்து, இன்று முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியது. 

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி 14 முதல் தொடங்கலாம் என்று மாநில செயற்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 9ஆம் முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கியது. 

மாணவர்கள் சீருடை அணிந்தும், தடுப்பூசி சான்றிதழ்கள் கையில் வைத்திருந்தபடி பள்ளிக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

இருப்பினும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்பட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேவையான ஏற்பாடுகளைச் செய்தபின் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரின் குளிர்கால மண்டலம் மற்றும் ஜம்மு பகுதியில் பனி சூழ்ந்த பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள் தற்போது குளிர்கால விடுமுறையில் உள்ளன.

குளிர்கால மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆஃப்லைன் கற்பித்தல் பிப்ரவரி 28க்குப் பிறகு தொடங்குகின்றது. 

கோடை மண்டல பள்ளிகளில், ஜூனியர் வகுப்புகளுக்கான ஆஃப்லைன் கற்பித்தல் முறை பிப்ரவரி 21 முதல் தொடங்க உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments