இந்தியா

ம.பி.யில் வேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 4 தொழிலாளர்கள் பலி, 15 பேர் காயம்

DIN

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் வேன் ஆற்றில் கவிழ்ந்ததால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாலம் கட்டும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கோலராஸ் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் சிங் கூறினார். 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரிட்டிலா ஹிராபூர் கிராமத்திற்கு அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், அங்குள்ள சிந்து ஆற்றில் விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். 

இறந்தவர்களில் மூன்று பேர் ஹமீத் முகமது அப்துல்லா, காஹுல் அமீன் மற்றும் ஹக்கீம் முஸ்தபா என அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT