நாட்டில் கரோனா பாதிப்பு 27,409; குணமடைந்தோர் 82,817 
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 27,409; குணமடைந்தோர் 82,817

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,409 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 347 பேர் உயிரிழந்தனர்.

ANI

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,409 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 347 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 27,406 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 347 பேர் உயிரிழந்தனர். 

நேற்று ஒரேநாளில் 82,817 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 4,23,127 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 173 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.23 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.99 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT