இந்தியா

மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்

DIN

மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பல வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க் கிழமை காலை 6:30 மணியளவில் லாரி ஒன்று கோபோலி என்ற இடத்தில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பல வாகனங்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT